8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

Update: 2024-04-13 02:10 GMT

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து வெப்பத்தை சற்று தணித்து வருகிறது. தென் தமிழக பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்