யு.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்

இந்திய குடிமை பணி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-03 05:32 GMT

சென்னை:

இந்திய குடிமை பணி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சென்னை மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்காக நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ந்தேதி சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வாராந்திர அட்டவணைப்படி இயங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்