சென்னை புறநகர் ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மே தினத்தையொட்டி சென்னை புறநகர் ரெயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-30 04:50 GMT

சென்னை,

நாளை மே தினத்தையொட்டி பொது விடுமுறை விடப்படுவதால், சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

மேலும், சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான ரெயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்