பச்சையப்பன் கல்லூரி பொங்கல் விழாவில் மோதல் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-13 06:48 GMT

சென்னை,

சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 3 பேரை கைது செய்த போலீசார் காயமடைந்த 2 மாணவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து ஒரு மாணவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்