தர்மபுரி ஏல அங்காடியில்ரூ.11 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

Update: 2023-07-10 19:00 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,512 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.525-க்கும், குறைந்தபட்சமாக ரூ.314-க்கும், சராசரியாக ரூ.442.86-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்து 851-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்