உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தயார் நிலையில் தென்னங்கன்றுகள்

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2023-05-25 18:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தற்போது 11 ஆயிரம் எண்ணிக்கையில் நெட்டை- குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு 6 மாத கன்றுகளாக விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு தென்னங்கன்றின் விலை ரூ.125 ஆகும். இந்த நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 3 முதல் 4 ஆண்டுகளில் காய்ப்புக்கு தயாராகிவிடும்.

எனவே விவசாயிகள் தென்னங்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களை உச்சிப்புளி தென்னை நாற்றுப்பண்ணை உதவி வேளாண்மை அலுவலரை 7904975577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உதவி வேளாண்மை அலுவலர் அமர்லால் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்