தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-17 19:11 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (வயது 19). இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்கமுடியாமல் ஹேமச்சந்திரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்