தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

திருக்கோவிலூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-01 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் தாசார்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் திருமலை (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30 -ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு திருமலை சென்றார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திருமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து திருமலை எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்