ஏரியூர் அருகேகல்லூரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

ஏரியூர் அருகேகல்லூரி மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்;

Update:2023-07-13 00:15 IST

ஏரியூர்

ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது பெண் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை, இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மாணவி ஏரியூர் அருகே உள்ள நரசிமேடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 23) என்பவர் கடத்தி சென்று காங்கேயம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்