1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-25 16:34 GMT

உத்தமபாளையம் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று உத்தமபாளையம்-மார்க்கையன்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் 1,450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே அதிகாரிகளை கண்டதும் லாரியில் வந்தவர்கள் தப்பி ஓடினா். பின்னர் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்