மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-06-26 16:40 IST

ஆரணி

மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் ஆரணி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். தச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் அருகே செல்லும்போது வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தி வந்து கொண்டிருந்தார்.

போலீசாரை பார்த்ததும் மாட்டுவண்டியை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு செல்வம் தப்பி ஓடினார். அங்கிருந்த மாட்டு வண்டியை ஆரணி தாலுகா போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்