ரூ.1¾ கோடியில் நூலகத்துடன் அறிவுசார் மைய கட்டிடம் கட்டும் பணி

உளுந்தூர்பேட்டையில் ரூ.1¾ கோடியில் நூலகத்துடன் அறிவுசார் மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

Update: 2022-08-04 17:10 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை நகராட்சி 2-வது வார்டு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இதில் நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் தலைவர் ஜெயசங்கர், திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகன், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இலங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் சரவணன் வரவேற்றார். இதில் முன்னாள் நகர செயலாளர் செல்லையா, நகர மன்ற உறுப்பினர்கள் குமரவேல், கோபி, மாலதி ராமலிங்கம், ராஜேஸ்வரி சரவணன், சந்திரகுமார், ரமேஷ்பாபு, மனோபாலன், மகேஸ்வரி ரமேஷ், அப்துல் ரஷீத் ராஜவேல், சுமதி ராஜேந்திரன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. நிர்வாகி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்