கட்டிட தொழிலாளி தற்கொலை

நெல்லை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-04-30 00:15 IST

நெல்லை அருகே மேலத்தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் சப்பாணி மகன் மாரியப்பன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாம். இந்தநிலையில் இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்