வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் நகரில் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-06 18:45 GMT

விழுப்புரம் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும் வர்த்தகர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கலந்துகொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசி சில அறிவுரைகளை வழங்கினார். மேலும் நகரின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்