ராசிபுரம் மக்கள் நீதிமன்றத்தில்15 மோட்டார் விபத்துகளில் ரூ.61 லட்சத்திற்கு தீர்வு
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குணசேகரன் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு தொடர்பான மக்கள் நீதிமன்றம் நடந்தது. ராசிபுரம் சார்பு மன்ற நீதிபதி தீனதயாளன் தலைமை தாங்கினார். வக்கீல் மூத்தீஸ்வரன் அமர்வு பங்கேற்றனர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் 15 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் மொத்தம் ரூ.60 லட்சத்து 76 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது.