சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-11-18 17:33 GMT

திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 35). இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்