ஓசூரில் வாகனம் மோதி ஒருவர் பலி

Update: 2023-05-26 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில், பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்?, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்