பாப்பிரெட்டிப்பட்டி அருகே மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-11 15:34 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.துறிஞ்சிப்பட்டி வடந்தையூர் பகுதியை சேர்ந்தவர் ரஷித் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர்கள் இர்பான் (26), ஆறுமுகம் (52). இவர்கள் 3 பேரும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி தென்றல் நகரில் உள்ள பீணியாற்றில் மீன்பிடிக்க சென்றனர். இர்பான், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் ஆற்றில் இறங்கி மீன் பிடித்துள்ளனர். ரஷித்துக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றின் கரையில் அமர்ந்து இருந்தார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அ.பள்ளிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ரஷித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்