பெட்ரோல் பங்க் ஊழியர் சாவு

ஏரியூர் அருகே பாறையில் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-05 17:11 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள சாமத்தாள் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் (வயது27), பழனிசாமி (30). பெட்ரோல் பங்க் ஊழியர்கள். நண்பர்களான இவர்கள் 2 பேரும் வேலை நேரம் முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். கோட்டம்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பாறையில் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்