மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் சாவு

கெலமங்கலம் அருகே மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் இறந்தான்.

Update: 2022-12-13 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே உள்ள காளிநாயக்கனப்பள்ளியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வேலு (வயது 10). இவன் காளிநாயக்கனப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 10-ம் தேதி சிறுவன் வேலு வீட்டின் அருகில் இருந்த மரத்தில் எறிய போது தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவனை பெற்றோர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் வேலு பரிதாபமாக இறந்தான். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்