மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் சாவு

அஞ்செட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.

Update: 2023-03-08 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). அதேபகுதியை சேர்ந்தவர் குமார் (32). சம்பவத்தன்று இவர்கள் தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். குந்துக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்