ஏரியில் மூழ்கி 3 வயது குழந்தை சாவு

காவேரிப்பட்டணம் அருகே 3 வயது குழந்தை ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

Update: 2023-03-12 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே 3 வயது குழந்தை ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

குழந்தை சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கோசமேட்டை சேர்ந்தவர் சபீர். தொழிலாளி. இவரது மகன் சபாஷ் (வயது3). இதனிடையே நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. இதனால் பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள எள்ளுகுட்டை ஏரியில் குழந்தை மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் குழந்தையை தேடினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை, ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

சோகம்

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்