சாத்தான்குளத்தில்அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில்அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-10 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டத் தலைவர் செல்வ அந்தோணி சுதர்சன் தலைமை தாங்கினார். வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன், சங்க மாவட்டத் தலைவர் செந்தூர் ராஜன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்