அடிப்படை வசதி செய்துதரக்கோரி தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் அருகே அடிப்படை வசதி செய்துதரக்கோரி தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-22 18:29 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் மணி நதி செல்லும் சாலையில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு 7 மணிக்கு அப்பகுதியில் உள்ள சாலையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு உடனே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்