கிடுகு திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
கிடுகு திரைப்படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாதி மோதல்களை தூண்டும் விதமாக திரைக்கு வர உள்ள கிடுகு திரைப்படத்தை தடை செய்யக்கோரியும், திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தோகைமலைமலையில் தேவர் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேவர் பேரவை நிர்வாகிகள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழக அரசு உடனடியாக கிடுகு திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.