கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு;

Update:2022-10-17 00:15 IST

கந்தம்பாளையம்:

வெண்ணந்தூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் கந்தம்பாளையம் அருகே பீச்சபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் பீச்சபாளையத்தில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் கணேசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்