மாடு முட்டியதில் பெண் பலி

Update: 2023-05-05 19:00 GMT

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் பக்கமுள்ள பூர்ணப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவருடைய மனைவி ரத்தினம்மாள் (வயது 45). இவர் கடந்த மாதம் 23-ந் தேதி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தபோது மாடு முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினம்மாள் இறந்தார். இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்