கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வைரமூர்த்தி தலைமை தாங்கினார். போட்டியை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி தொடங்கி வைத்தார். போட்டி 14, 17, 19 வயது என 3 பிரிவுகளாக தனித்தனியாக நடைபெற்றது. போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், எ.உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 2-ம் இடமும், என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் வாங்கல் எஸ்.டி. மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், காக்காவடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், வெள்ளியணை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்தன. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.