வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2024-05-09 11:03 GMT

சென்னை,

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணையில் , மருத்துவர்கள் விதிமீறலில் ஈடுபடவில்லை.பணி நிமித்தமாக அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது; மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து  வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க  ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும் , மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 22-ம் தேதிக்கு  ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்