மயங்கி விழுந்து டிரைவர் சாவு

மயங்கி விழுந்த டிரைவர் இறந்தார்.

Update: 2023-07-01 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பாம்பாக்கை தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது50). லாரி டிரைவரான இவர் இரவாஞ்சேரி பகுதியில் மணல் ஏற்றி கொண்டு வந்தார். பின்னர் இரவாஞ்சேரியில் உள்ள கடைக்கு சாப்பிட சென்ற போது, திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது அண்ணாதுரை இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணவாளநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உடனடியாக இரவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இரவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்