தொடர் மழை எதிரொலி - சென்னை மாநகராட்சி ஷாக் ரிப்போர்ட்

சென்னை கடற்கரையில் 34.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2022-11-10 03:08 GMT

சென்னை,

சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையில் குவிந்தன. இதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் பட்டினபாக்கம் சீனிவாசபுரத்தில் 26.50 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ப்ரோக்கன் பிரிட்ஜ் பகுதியில் 8 மெட்ரிக் டன் கழிவுகள் என மொத்தமாக 34.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்