முதியவர் தற்கொலை

தேனியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-17 18:45 GMT

தேனி பாரஸ்ட்ரோடு ரெயில்வே கேட் அருகில் வசித்து வந்தவர் போஸ் (வயது 60). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய மனைவி காமாயி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்