விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-13 19:59 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 66). விவசாயி. இவர் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு பிரச்சினையால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனேஅவரது உறவினர்கள் சுப்புராஜை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்