விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திருவேங்கடம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-01 18:45 GMT

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்துள்ள குருஞ்சாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 61). டிராக்டர் மெக்கானிக்கான இவர் விவசாயமும் செய்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து தாயார் ஆதிலட்சுமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணபதி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை தாயார் ஆதிலட்சுமி கண்டித்தார். ஆனாலும் கணபதி தொடர்ந்து மது குடித்து வந்ததால் ஆதிலட்சுமி வேறொரு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த கணபதி தோட்டத்துக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரை லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்