மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-06-10 18:50 GMT

விராலிமலை:

விராலிமலை தாலுகா கொடிக்கால்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை தனது 3 வயது பேரன் சஸ்வந்த்துடன் மோட்டார் சைக்கிளில் ராஜகிரிக்கு பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். பால் வாங்கிவிட்டு ராஜகிரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது மலைக்குடிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வீராச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வீராச்சாமி மற்றும் அவரது பேரன் சஸ்வந்த்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீராச்சாமி உயிரிழந்தார். சஸ்வந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்