பள்ளிபாளையம்:-
பள்ளிபாளையம் நாட்டாகவுண்டன்புதூர் பகுதியில் காவிரி கரையோரம் அழுகிய நிலையில் பெண் உடல் ஒதுங்கியது. சுமார் 45 வயதுடைய அந்த பெண் யார் என்பது தெரியவில்லை. அவரது உடலை அடையாளம் காணும் முயற்சியில் பள்ளிபாளையம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிைடயே அந்த பெண், ஆற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.