கிணற்றில் பெண் பிணம்

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-12 18:04 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குருபீடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் அலமேலு (வயது 20). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே ஊரில் உள்ள ஒருவரின் விவசாய கிணற்றில் அலமேலு பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் அலமேலு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்