தூக்குப்போட்டு பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த 1½ ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-04-04 18:45 GMT

குத்தாலம்:

காதல் திருமணம் செய்த 1½ ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மல்லியம் ரெயிலடி தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் கணேஷ் (வயது28). காரைக்காலில் உள்ள பியூட்டி பார்லரில் பணியாற்றி வருகிறார்.

இவரும், அதே பியூட்டி பார்லரில் பணியாற்றிய காரைக்கால் சொரக்குடி மேலசுப்பராயபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பவுலின் மகள் ஜெனிபர் (24) என்பவரும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ஜெனிபர் நேற்று முன்தினம் இரவு குழந்தையை தனது மாமியாரிடம் விட்டு விட்டு மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் அங்கு சென்று ஜெனிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஜெனிபரின் தந்தை பவுலின் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் தற்கொலைக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்