மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-16 18:45 GMT

வெள்ளிச்சந்தை அருகே உள்ள முட்டம் ஜார்ஜியார் தெருவை சேர்ந்தவர் சூசை மார்க் (வயது 62), மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சூசை மார்க் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தன் அறைக்கு தூங்க சென்றவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சத்தம் கேட்டு அறைக்குள் சென்ற குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சூசை மார்க் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி வசந்தி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்