முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2022-07-16 00:15 IST

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்