விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம்
விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து 45-வது இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி துணை ஆளுனர் வடிவேல் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். முகாமில் ரோட்டரி சங்க செயலாளர் ராஜீவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.