பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-08-03 19:00 GMT

மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை சார்பில் தென்காசி வட்டார பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பள்ளிகளில் இருந்தும் 40 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பரிசு பெற்றனர்.

தென்காசி நூலகர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நன்நூலகர் ராமசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மேலகரம் (பொறுப்பு) நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்