திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்திவந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாயில் இருந்து வந்த ஆண் பயணியை பரிசோதித்ததில், அவர் தனது சூட்கேஸ் பெட்டியில் தங்கத்தை கம்பி போல வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்த 629 கிராம் எடையுள்ள ரூ.35.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.