ஒரத்தநாடு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

ஒரத்தநாடு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Update: 2023-09-06 20:53 GMT

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று இரவு ஒரு அரசு பஸ் ஈச்சங்கோட்டை வழியாக ஒரத்தநாட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் துரைராஜ் ஓட்டி வந்தார். பஸ் சேதுராயன்குடிக்காடு பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்