மொபட் மீது அரசு பஸ் மோதல்; முதியவர் பலி
நெல்லை தச்சநல்லூரில் மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.;
நெல்லை தச்சநல்லூர் சிதம்பரநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 70). ஏ.டி.எம். மைய காவலாளி. இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலத்தில் கொம்புமாடசாமி கோவில் அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த கோவில்பட்டியை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.