ஆனைமலை
ஆனைமலையை அடுத்த பாரமடையூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 52). சமையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தார். பின்னர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.