தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-12 18:45 GMT

விருதுநகர் அருகே 19 காலனி பகுதியில் காளியம்மன் கோவில் தெருவில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிப்பதால் மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்