காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-02 16:43 GMT

காரைக்கால்,

தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

இந்த சூழலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஜந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அந்த வகையில் காரைக்கால் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்