குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

Update: 2023-01-13 08:16 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிரமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் மாசி (வயது 62). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி 2 பேரும் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்