வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை நகரசபை தலைவர் வழங்கினார்

Update: 2023-08-28 18:45 GMT

சிவகங்கை நகராட்சியில் வியாபாரிகளுக்கு விற்பனை சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சான்றிதழை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் வழங்கி தெரிவித்ததாவது:-

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வியாபாரிகளுக்கு பி.எம்.எஸ்.வி.ஏ. நிதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டை, விற்பனை சான்று, கடனுதவி வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள தெருவோர வியாபாரிகள் 542 பேரில் 332 பேருக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கடனுதவி பெற்று அதை திருப்பி செலுத்தியவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 91 பேர் இரண்டாம் கட்ட கடன் பெற்றுள்ளனர். மூன்றாம் கட்ட கடன் ரூ.50 ஆயிரம் 13 பேர் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 436 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறாத மற்ற வியாபாரிகளும் நகராட்சி அலுவலகத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் அப்துல்ஹாரிஸ், நகரமைப்பு அலுவலர் தயாநிதி, சமுதாய அமைப்பாளர் மலர்மங்கை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்